மன்னார் மனிதப் புதைகுழி 22 இல் முடிவு

மன்னார்  சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட   மனிதப் புதைகுழி தொடர்பில், எதிர்வரும் 22ஆம் திகதி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று, புதைகுழி அகழ்வுக்குப் பொறுப்பான சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தடயவியல் விசாரணையாளர்கள் மற்றும் காணாமல் போனோர் பணியகத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை,  மன்னார் நீதிவானைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இதன்போது, மன்னார் புதைகுழி தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

றேடியோ கார்பன் அறிக்கை, மன்னார் புதைகுழி விடயத்தில், இறுதியானதாக இருக்காது, பார் – கோட் பரிசோதனை உள்ளிட்ட ஏனைய ஆய்வு அறிக்கைகளும், இறுதி முடிவு எடுக்கப்படும் போது, கருத்தில் கொள்ளப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment