33 இராணுவம் உயிரிழப்பு

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அல் கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் வசம் இருந்த பகுதிகள் அரசு படையினரால் மீட்கப்பட்டு வருகின்றன. இட்லிப் பகுதியில் ஹமா மற்றும் அலெப்போவின் பெரும்பாலான பகுதிகள் இன்னும் ஹயாத் தாகிர் அல்- ஷாம் என்ற பயங்கரவாத அமைப்பின் பிடியில் உள்ளன.

ஹயாத் தாகிர் அல்-ஷாம் அமைப்பு அல் கொய்தாவின் கிளை இயக்கமாக  செயல்பட்டு வந்தது. 

இந்த நிலையில் இட்லிப்பில் ஹமா, அலெக்போவை மீட்க சிரியா ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தியது.

பதிலுக்கு ஹயாத் தாகிர் அமைப்பும் தாக்கியது. இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் 33 ராணுவத்தினர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்தத் தகவலை சிரியா ராணுவம் உறுதி செய்துள்ளது.

ஆனால் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

இதேவேளை பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் 27 இராணுவத்தினர் உயிரிழந்தனர் என சிரியாவில் இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment