சீனாவில் செய்தி வாசிக்கும் ரோபோ

உலகிலேயே முதல் முறையாக செய்தி வாசிப்பாளராக பெண் ரோபோவை உருவாக்கியுள்ளது  சீனா.

சீன அரச செய்தி நிறுவனமான சின்குவா செய்தி சேனல், பெண் போன்ற வடிவமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ரோபோவை செய்தி வாசிப்பாளராக பயன்படுத்தியுள்ளது. 

பீஜிங்கில் வருடாந்த நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துக் கொள்ளவிருக்கும் தலைவர்கள் குறித்த செய்திகளை இந்த ரோபோ வாசித்தது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ரோபோ மனிதர்களை போல முக பாவனைகள் மற்றும் செயல்களை அப்படியே செய்யும் திறன் கொண்டதாம். 

இதற்கு ‘சின் சியாமெங்’ என பெயரிடப்பட்டுள்ளது. சிறிய காதணிகள், இளஞ்சிவப்பு நிற உடை அணிந்து, முடி போன்றவை சாதாரண பெண் போன்று இயல்பாகவிருக்கிறது.

சின்குவா சேனலின் செய்தி வாசிப்பாளர் கியூ மங் உருவத்தை மாதிரியாகக் கொண்டு இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பெண் ரோபோவை, சின்குவா செய்தி சேனலும் சொகோவு எனும் தொழிநுட்ப நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment