கொலைகாரன் கோட்டா ஜனாதிபதியாக வேண்டாம்

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் - மகிந்தவின் சகோதரர் - 'கொலைகாரன்' கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதைத் தமிழ் மக்கள் விரும்பவில்லை. 

இவ்வாறு காரசாரமாகக் கருத்து வெளியிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்.

அவர் தெரிவித்ததாவது,

ஒரு இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்களைக் கொலை செய்து இந்த மண்ணில் பெரிய இனப்படுகொலையை நடத்திய கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வர வேண்டும் என்று நிற்கிறார். 

ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற கனவை கோட்டாபய முதலில் விடவேண்டும். அந்தக் கொலைகாரன் ஜனாதிபதியாக வருவதைத் தமிழ் மக்கள் விரும்பவில்லை - என்றார்.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment