கள்ளக் காதலால் வந்த வினை

காதலியைக் கொலை செய்துவிட்டுச் சடலத்துடன் இரு நாள்கள் தங்கியிருந்தவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த ரவி என்பவர்  மாவு மில் நடத்தி வருபவர். இவர் தனது மில்லில் கூலி வேலை பார்த்து வந்த விதவைப் பெண்ணொருவரைக் காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் மாவு மில்லில் உள்ள அலுவலக அறையில் தினமும் இரவுப் பொழுதுகளை கழித்து வந்துள்ளனர். இதை அறிந்த ஏனைய கூலித் தொழிலாளர்கள் குறித்த விதவைப் பெண்ணைக் கண்டித்தனர்.

ரவி, தனது வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கித் தருவதோடு, தனது 4 குழந்தைகளின் கல்விச் செலவுக்கும் உதவியதால் அவருடனான தொடர்பை அப் பெண் துண்டிக்கவில்லை.

இந்த நிலையில் இரு நாள்களாக மாவு மில் மூடியிருந்ததால், வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். நேற்று மில்லின் உள்ளிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் மாவு மில்லை திறந்த போது ரவியின் காதலி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவர் அருகில் ரவி குடிபோதையில் படுத்துக் கிடந்தார்.

பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றிய பொலிஸார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அவரது உடலைப் பரிசோதித்ததில்,
அவரின் தலை சுவற்றில் மோதியதால் மண்டை உடைந்து உயிரிழப்பு ஏற்பட்டமை தெரியவந்தது.

போதை தெளிந்த பின்னர் ரவி அளித்த வாக்குமூலத்தில், சம்பவத்தன்று குறித்த பெண்ணும், ரவியும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது அப் பெண்ணின் நடத்தை தொடர்பில் எழுந்த சந்தேகத்தில் ஏற்பட்ட தகராறில், அவரைப் பிடித்து ரவி சுவற்றில் தள்ளி கொலை செய்துள்ளார்.

ஆனால் அப் பெண் குடிபோதையில் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்து ரவி அப்படியே விட்டுவிட்டார்.

சம்பவத்தன்று காலையில், பெண்மீது குடம் குடமாகத் தண்ணீரை  ஊற்றிப் போதையைத் தெளிய வைக்க முயன்றுள்ளார். குறித்த பெண் அசைவின்றி கிடந்ததால், அவர் இறந்தது ரவிக்கு தெரியவந்தது.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த ரவி அந்த அறையிலேயே படுத்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதன்பின்னர் தான் துர்நாற்றம் வீசியதால் அவர் சிக்கி கொண்டார்.

ரவியை கைது செய்த பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் குறித்த விதவைப் பெண்ணின் 4 குழந்தைகளும் அனாதையாகியுள்ளன.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment