உயிரிழந்த பெண்ணோடு முச்சக்கர வண்டிப் பயணம்!!!

உயிரிழந்த பெண்ணொருவரின் சடலத்தை முச்சக்கரவண்டியில் கொண்டு சென்ற சம்பவம் தொடர்பில் ஹற்றன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


மாரவில பகுதியில் இருந்து ஹற்றன் பகுதிக்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ள பெண்ணொருவரை கொண்டு செல்ல வேண்டும் என முச்சக்கரவண்டி சாரதியிடம் கூறி,உயிரிழந்த பெண்ணின் சடலத்தை இருவர் முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றுள்ளனர். எனினும் பயண முடிவின் போது மரண வீட்டுக்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டிருந்ததை அவதானித்த பின்னரே, தான் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலத்தை ஏற்றி வந்ததை முச்சக்கரவண்டி சாரதி அறிந்துள்ளார்.

பின்னர் அவர் இது தொடர்பில் ஹற்றன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் மகளும், அவரது பேரணுமே இவ்வாறு முச்சக்கரவண்டியில் சடலத்தை கொண்டு வந்துள்ளமை  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹற்றன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment