சட்டவிரோத மீன்பிடி எழுவர் கைது

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுப்பட்ட எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சின்னப்பாடு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போதே வடமேற்கு கடற்படையினரால் நேற்று இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 28 கிலோ கிராம் மீன்களும், மீன்பிடி படகுகள் நான்கும் , மீன்பிடித்தலுக்காக பயன்படுத்திய இயந்திரங்கள் நான்கும் கைப்பற்றப்பட்டன. 

சின்னப்பாடு, மதுரன்குலி மற்றும்  பள்ளிவாசல்பாடுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19 , 34 , 35 , 37 , 43 மற்றும் 65 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.




Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment