வயலுக்குச் சென்ற விவசாயி மாயம்

வயலுக்குச் சென்ற விவசாயி  இதுவரை வீடு திரும்பவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

அம்பாறை மத்தியமுகாம் 6 ஆம் பிரிவைச் சேர்ந்த விவசாயியே நேற்றுமுதல் காணாமல் போயுள்ளார்.

வயல் பகுதியில் அமைந்துள்ள காட்டுக்குள், அவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளும், அவர் அணிந்திருந்த தலைக்கவசமும் வீழ்ந்து கிடப்பதை உறவினர்கள், அவதானித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வெல்லாவெளிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment