மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவுப் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் இவர்கள்கைது செய்யப்பட்டனர்.

குறித்த பகுதியில், மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்தாக வழக்குப் பதிவு செய்த இலங்கை கடற்படையினர்  அவர்களைக் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்த இரு விசைப்படகுகளும் காங்கேசன்துறை கடற்படைமுகாமில் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட  மீனவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment