மாந்தை மனித புதை குழி வழக்கு ஒத்தி வைப்பு

மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதை குழி தொடர்பான வழக்கு விசாரணைகள்  பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோவால் எதிர் வரும் ஏப்ரல் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த  வழக்கு  நேற்று விசாரணைக்காக மன்னார் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே எதிர் வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி தீர்ப்புக் கட்டளைக்காக  ஒத்தி வைக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழியிலிருந்து அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரியை எங்கே கார்பன் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பது என்பது தொடர்பான தீர்ப்புக்காக வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எனினும் மன்னார் நீதவான் நேற்று  நீதி மன்றுக்கு பிரசன்னமாகாத காரணத்தினால் குறித்த வழக்கு எதிர் வரும் ஏப்பிரல் மாதம் 22 ஆம் திகதி தீர்ப்புக் கட்டளைக்காக  தவணையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக மன்றில் முன்னிலையான சிரேஸ்ட சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மேலும் தெரிவித்தார். 



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment