பிரதமர் விடுத்துள்ள செய்தி!




ஐக்கிய தேசிய கட்சி மேலும் சில கட்சிகளுடன் இணைந்து அமைக்கவுள்ள புதிய கூட்டமைப்பு ஊடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை ஏற்படுத்தவுள்ளாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் ஆரம்பமான சிறிகொத்த - கிராமத்திற்கு என்ற வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகியன இணைந்து தேசிய ஜனநாயக கூட்டமைப்பு என்ற புதிய கட்சியை உருவாக்கியுள்ளோம்.
இந்த கூட்டமைப்பு ஊடாக, சுதந்திரம், பொருளதார வளர்ச்சி, நல்லிணக்கம், சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை என்பன பாதுகாக்கப்படும் என அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment