மன்னாரில் மௌலவி உட்பட 12 பேர் கைது

மௌலவி உட்பட 12 பேர் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு பொஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மன்னாரில் நேற்றுக் காலை முதல் மாலை வரை முன்னெடுக்கப்பட்ட இராணுவத்தினரின் சுற்றிவளைப்புத் தேடுதலின்போதே புதுக்குடியிருப்புப் பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தௌஹீத் ஜமா அத் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட மௌலவி உள்ளிட்ட 12 சந்தேகநபர்களும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment