மன்னாரில் சட்டவிரோத கற்றாளை அகழ்வு

சட்டவிரோத கற்றாளை அகழ்வு இடம் பெறும் அனைத்துப் பகுதிகளிலும் மும் மொழியிலான அறிவித்தல் பலகைகளை காட்சி படுத்த மன்னார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மன்னார் வங்காலை கற்றாளம் பிட்டிப் பகுதியில் கற்றாழைச் செடிகளைப் பிடுங்குவது தடை செய்யப்பட்டுள்ளது 

எனினும் குறித்த பகுதியில் சட்ட விரோதமாக மூட்டை மூட்டையாக கற்றாளைச் செடிகள் அகழ்வு செய்யப்பட்டு தென்பகுதிக்கு கடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இடம் பெற்ற நானாட்டான் பிரதேச சபை மாதாந்த அமர்வில் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஞனராஜ் சோசையினால், முன்வைக்கப்பட்ட பிரேரணையின் அடைப்படையில் கற்றாழை அகழ்வு தடை செய்யப்பட்டது.

இதனையடுத்து, மும்மொழியினாலான அறிவித்தல் பலகை   கற்றாளை செடிகள் காணப்படும் பிரதேசத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

இதேவேளை  எருக்கலம் பிட்டி, சாந்திபுர, தாராபுரம் போன்ற பகுதிகளிலும் சட்ட விரோத கற்றாளை அகழ்வுகள் இடம் பெற்று வந்துள்ளது.

இதனால்,  சட்டவிரோத கற்றாளை அகழ்வு இடம் பெறும் அனைத்து பகுதிகளிலும் மும் மொழியிலான அறிவித்தல் பலகைகளை காட்சி படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment