காதலி மூக்கைக் கடித்த காதலன்

காதலி பேச மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர், அவரது மூக்கை கடித்துக் குதறியுள்ளார்.

இந்தப் பரிதாபச் சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் 
நடந்தேறியுள்ளது.

உதைப்பூர் மாவட்டம் கேர்வாடா பகுதியை சேர்ந்த மஞ்சு பர்மர், அப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கேசவ்லால் என்பவரை காதலித்துள்ளார்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சந்த்கேடாவில் வசிக்கும் சகோதரி வீட்டுக்குச் சென்ற மஞ்சு, அங்கேயே தங்கியபடி கூலித்தொழில் செய்து வந்துள்ளார்.

இதனால், கேசவ்லாலுடனான தொடர்பையும் அவர் நிறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் தனது நண்பன் மூலம் மஞ்சு, சந்த்கேடாவில் இருப்பதை  கேசவ்லால், அறிந்து கொண்டார்.

கடந்த 8 ஆம் திகதி அவரைப் பார்க்கச் சென்றுள்ளார் கேசவ் லால். ஆனால் தன்னுடன் மஞ்சு பேச மறுக்கவே, கடும் கோபத்திற்குள்ளான அவர், மஞ்சுவின் மூக்கை கடித்துள்ளார். 

வலியில் துடித்த மஞ்சு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக அவர் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்துள்ளார். மேலதிக விசாரணைகளை் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment