ஏர்டெலை பின்தள்ளி முன்னேறியது ஜியோ

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் ஏர்டெல் நிறுவனத்தை மூன்றாம் இடத்திற்குத் தள்ளி ஜியோ நிறுவனம் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து தனது சேவையை ஆரம்பித்தது. அன்றிலிருந்தே இலவசங்களை வாரி வழங்கியது. 

வாய்ஸ் கால் முதல் டேட்டா வரை அனைத்து சேவைகளையும் இலவசமாகவே தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது.  

இதுபோன்ற பல இலவச சலுகைகள் மூலம் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. ஏனைய போட்டி நிறுவனங்கள் அனைத்தும் பல சலுகைகளை வழங்கியும் ஜியோவின் வளர்ச்சியை சற்றும் தடுக்க முடிவில்லை.

வருமானத்தையும் வாடிக்கையாளர்களையும் இழக்க ஆரம்பித்த மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள். இப்போது விடயம் என்னவெனில், ஜியோவின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 30.6 கோடியாக உயர்ந்துள்ளது. 

 வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் ஏர்டெல் நிறுவனத்தை மூன்றாம் இடத்திற்குத் தள்ள ஜியோ நிறுவனம் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஏர்டெல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 28.4 கோடியாகும். 

ஏர்டெல் நிறுவனம் பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருந்த நிலையில், இப்போது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதில் முதல் இடத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் உள்ளது. வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் ஒன்றிணைந்ததால் அந்த நிறுவனம் 38.7 கோடி வாடிக்கையாளர்களுடன் முதல் இடத்தில் உள்ளது. 


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment