நாய்கள் காப்பகம் திறந்து வைப்பு

கிளிநொச்சி, பளை, இயக்கச்சிப் பகுதியில்  சிவபூமி  அமைப்பினால் நேற்றையதினம்  நாய்கள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


அநாதரவாக தெருக்கள் மற்றும் ஏனைய இடங்களில் காணப்படுகின்ற நாய்கள் குறித்த காப்பகத்தில் பராமரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 


 சிவபூமி அமைப்பின் தலைவர் ஆறு திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், நல்லூர் ஆதீன குரு முதல்வர் , நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், பளை பிரதேச செயலர் ஜெயராணி, பிரதேச சபைத் தவிசாளர் சுரேன், வடக்கு மாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment