வாய்த்தர்க்கம் மோதலாகியது ; தமிழ் முஸ்லிம் இளைஞர் கைது

நாட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் நடந்துள்ளது.

ஒரே கடையில் பணியாற்றிய முஸ்லிம், தமிழ் இளைஞர்கள் இடையே இந்தத் தர்க்கம் ஏற்பட்டது.

முஸ்லிம் இளைஞனை தமிழ் இளைஞன்அகப்பைக் காப்பினால் தாக்கியுள்ளார். இதன்போது முஸ்லிம், இளைஞன் தமிழ் இளைஞனைக் கத்தியால் வெட்டியுள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் இருவரையும் கைது செய்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment