அமெரிக்காவிடம் நிதி கோரும் வட கொரியா

நீண்ட காலம் கோமாவிலிருந்து பின்னர் உயிரிழந்த மாணவருக்கு அமெரிக்காவிடம், வட கொரியா இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

உயிரிழந்த அமெரிக்க மாணவர் ஓட்டோ வார்ம்பியரின் மருத்துவத்துக்காய் மேற்கொண்ட  செலவுகளுக்கே இந்த நிதி கோரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2015 ஆம் ஆண்டு டிசம்பரில் சுற்றுலாவுக்காகச் சென்ற வார்ம்பியர், வட கொரியாவில் சிறையில் அடைக்கப்பட்டார். 17 மாதங்கள் காவலில் வைக்கப்பட்டு கோமா நிலையில் அமெரிக்கா திரும்பிய அவர் அங்கு உயிரிழந்தார்.

வார்ம்பியரை அவரது நாட்டிற்கு அனுப்பும் முன்னரே அவரின் மருத்துவ செலவுகளை அமெரிக்கா ஏற்க வேண்டும் என்று, வட கொரியா கேட்டது. 

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க அமெரிக்க வெள்ளை மாளிகை மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment