தமிழகத் தேர்தலால் பலகோடி பறிமுதல்

நாளையதினம் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 138.57 கோடி பணம் இதுவரையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

விடயம் தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,

நேற்று மட்டும் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள பணம் - 3.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் கோவை - 1.41 கோடி
கடலூர் - 52.39 இலட்சம் ராமநாதபுரம் - 19.94 இலட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ள பணம் - 56.55 கோடி (PSK பொறியியல் கட்டுமான நிறுவன பறிமுதல் அடக்கம் 14.17 கோடி)

இதுவரை பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தங்கம் -  ஆயிரத்து 22 கிலோ , வெள்ளி 645 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. விலைமதிப்பற்ற உலோகங்களின் மொத்த மதிப்பு - 294.38 கோடி.

43.54 இலட்சம் பெறுமதியான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். இதே வேளை போதைப் பொருள்கள் பறிமுதல் மதிப்பு - 37.68 லட்சம். என்றார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment