துப்பாக்கிச் சூடு ஒருவர் சாவு


முல்லேரியா, ரணபிம மாவத்தை வடக்கு பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாகப் பொலிஸார்தெரிவித்துள்ளனர். 

இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத மூவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் முல்லேரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். 

 38 வயதுடைய வர்த்தகர் ஒருவரே சாவடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment