நாவாந்துறைக்குச் சென்ற ஆளுநர்

யாழ்ப்பாணம் நாவாந்துறை மற்றும் ஐந்து சந்தி பகுதிகளுக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நேற்று   திடீர் கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார்.

நாவாந்துறை பொதுச்சந்தைக்கு விஜயம் செய்த ஆளுநர் அங்குள்ள வியாபாரிகள் மற்றம் பிரதேச மக்களுடன் சுமூகமான கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.

குறித்த பகுதிகளில் வாழும் மக்களின் பாதுகாப்பு தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் ஆளுநர் பிரதேச மக்களிடம் கேட்டுக்கொண்டார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment