குண்டுத் தாக்குதல் ; இதுவரையில் நான்கு வாகனங்கள் மீட்பு

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு வாகனங்கள் இதுவரையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

அதன்படி DAE - 4197 என்ற இலக்கத்தகடுடைய பாரவூர்தி, PH-3779 என்ற இலக்கத்தகடுடையுடைய வேன், 144-2644 என்ற இலக்கத்தகடுடையுடைய மோட்டார் சைக்கிள் US -3740 தகடுடையுடைய ஸ்கூடர் மோட்டார் சைக்கிளொன்றும் இவ்வாறு பொலிஸாரால் மீட்கப்பட்டன. 

இதேவேளை BYC - 2183, PVC -7783, VC - 4843 மற்றும்  BMD - 0596 ஆகிய மோட்டர் சைக்கிள்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், இது தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைத்தால் பொலிஸ் நிலையங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.




Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment