வெட்கக்கேடான செயலில் கோத்தபாய - சந்திரிகா

கோத்தபாய ராஜபக்ச தாம் செய்த போர்க்குற்ற மீறல்களையும், மனித உரிமை மீறல்களையும் மூடி மறைக்க முற்படுவது அருவருக்கத்தக்க வெட்கக்கேடான செயலாகும். இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமரதுங்க தெரிவித்துள்ளார் 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் போட்டியிடுவதற்கு நாட்டில் உள்ள அமைப்புக்களோ, சர்வதேச அமைப்புக்களோ ஒருபோதும் இடமளிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச செய்திச் சேவை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது,

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அதற்கிடையே மகிந்த அணியினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நாசமாக்கியவர்களும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கொக்கரிக்கத் தொடங்கி விட்டனர்.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் மீது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் போர் விதி மீறல்கள் தொடர்பாகவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிறையில் இருக்க வேண்டிய கோத்தபாய ராஜபக்ச இரட்டைக் குடியுரிமை என்ற கவசத்தை அணிந்துகொண்டு அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் மாறி மாறிச் சுற்றுலா செல்கிறார். அண்மையில் அவருக்கு எதிராக அமெரிக்காவில் பாரதூரமான இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கைக்குத் திரும்பி வந்துள்ள அவர் நாட்டு மக்கள் முன்னிலையில் நல்ல பிள்ளைக்கு நடிக்க முயல்கின்றார்.

இரட்டைக் குடியுரிமையுடன், போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள கோத்தபாய , ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எமது நாட்டுச் சட்டமும், நாமும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதை அவர் கவனத்தில்கொள்ள வேண்டும்-என்றார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment