ஒருதலைக் காதலால் பறிபோன உயிர்

இளம் பெண்ணைக் கொன்று விட்டு நாடகமாடிய உறவுக்கார இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இந்தியாவின் தமிழகத்தில், தஞ்சாவூரில் நடந்துள்ளது.
 சென்னையில் உள்ள தனியார் லேப்பில் டெக்னீஷினியனாக வேலை செய்பவர் தஞ்சாவூரை சேர்ந்த அகிலா என்பவர்.

அகிலாவுக்கும் அவரது அக்கா கணவரின் தம்பி சந்தோசுக்கும் நீண்ட நாள்களாகப் தொடர்பிருந்து வந்தாகக் கூறப்படுகிறது.

சந்தோஷ் தனது அண்ணனுடன் சிட்லபாக்கம் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அகிலா திடீரென சந்தோஷிடம் பேசாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் தனியாக பேச வேண்டும் என அகிலாவை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் மறுநாள் காலை, அகிலா எழுந்திருக்காததால், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அகிலாவை பரிசோதித்த மருத்துவர்கள் 4 மணி நேரத்திற்கு முன்னரே அகிலா இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தோஷ், அகிலாவின் உறவினர்களுக்கு தொடர்புகொண்டு, அகிலாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், மாடியில் உள்ள கிரில்கேட்டில் இடித்துக் கொண்டதால், அகிலாவின் தலையில் இரத்தக் காயம் ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

மறுநாள் காலை அவர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அகிலாவின் உறவினர்கள் , சந்தோஷ் தான் அகிலாவை கொலை செய்து இருப்பார் என பொலிஸ் புகார் அளித்தனர்.

இதனிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில், அகிலா கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டமை தெரிய வந்துள்ளது.

இதையடுத்து பொலிஸார் சந்தோஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தான் அகிலாவைக் காதலித்து வந்ததாகவும், அவர் வேறு ஒருவரைக் காதலிப்பதாகத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்து, அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் சந்தோஷ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து  சந்தோஷைக் கைது செய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment