வன்முறைகளை கட்டுப்படுத்த வானூர்திகள்

நாட்டில்  தொடரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த  உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்படும் என்று விமானப் படையின் பேச்சாளர் குரூப் கப்டன் கிஹான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

வன்முறைகள் தொடர்பாகத் தகவல்கள் கிடைத்ததும், அப் பிரதேசங்களுக்கு உடனடியாக  உலங்கு வானூர்திகளை அனுப்பி வன்முறையாளர்கள் தொடர்பான காட்சிகளை வானிலிருந்தவாரே பதியவும்,  வானூர்தி மூலம் துருப்புக்களை இறக்கி நிலமையைக் கட்டுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment