கள்ளக்காதல் தகராறில் துணிக்கடை ஊழியர் கடத்தல்

சின்ன நீலாங்கரை குப்பத்தை சேர்ந்தவர் சாலமோன். இவர் பாலவாக்கத்தில் உள்ள உறவினரின் துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை சாலமோன் கடையில் இருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரை வெளியே அழைத்து சென்று காரில் கடத்தி சென்றனர்.

இது குறித்து நீலாங்கரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கடத்தல் கும்பல் சம்பவம் குறித்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர். இதற்கிடையே சாலமோனை கடத்தி சென்ற கும்பல் அண்ணாநகர் பகுதில் காரில் சுற்றுவது தெரிந்தது. இதுபற்றி அண்ணா நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் தீவிர சோதனை நடத்தி காரில் சுற்றிய கடத்தல் கும்பலை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் சிக்கி இருந்த சாலமோனை மீட்டனர்.

இது தொடர்பாக காரில் இருந்த வெட்டுவாங்கேனியை சேர்ந்த முகமது ஆரீப், துரைப்பாக்கம் விக்னேஷ், கதிர்வேல், பரத் மற்றும் மஞ்சுளா என்ற பெண் ஆகிய 5பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீலாங்கரை போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் கள்ளக்காதல் தகராறில் இந்த கடத்தல் நடந்து இருப்பது தெரிந்தது. சாலமோனுக்கும் வெட்டுவாங்கேனியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது.

இதனை அறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள் இந்த கடத்தலில் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக பிடிபட்ட 5 பேரிடமும் விசாரணை நடக்கிறது.


Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment