ஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்

இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமானாலும் ரஜினி முருகன் படம் மூலம்தான் கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகையானார். தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர், சாவித்திரி வாழ்க்கை படத்தில் நடித்தார். யாரும் எதிர்பாராத வகையில் இந்த படத்துக்கும் கீர்த்தியின் நடிப்புக்கும் நாடு முழுக்க வரவேற்பு கிடைத்தது.

இந்த வரவேற்பால் திக்குமுக்காடிப் போன கீர்த்தி சுரேஷ் அடுத்த படத்தை தேர்வு செய்ய காலம் எடுத்துக் கொண்டார். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஈஸ்வர் இயக்கத்தில் உருவாகும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திரில்லர் பாணி கதையில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தில் ஹீரோவே இல்லையாம்.



முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான கீர்த்தி தற்போது ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க தயக்குகிறார் என்கிறார்கள்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment