வெளிநாட்டைச் சேர்ந்த குழுவே சைபர் தாக்குதலுக்கு காரணம்

இலங்கை இணையத்தளங்கள் மீது இடம்பெற்ற சைபர் தாக்குதல் வெளிநாட்டைச் சேர்ந்த இரு குழுக்களால் நடத்தப்படதாக கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இணையத்தளங்கள் மீது இடம்பெற்ற சைபர் தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவ்வொன்றியத்தின் நிறைவேற்று அதிகாரி லால் டயஸ் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“நாட்டில் கடந்த 18 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு குழுவினாலும் 19 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் மற்றுமொரு வெளிநாட்டு குழுவினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சைபர் தாக்குதல் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தகவல்கள் கிடைத்தமையால் அதற்கான முன்னேற்பாடுகளை நாம் மேற்கொண்டிருந்தோம்.
ஆகையால் தாக்குதலை நடத்தியவர்களுக்கு எவ்விதத் தரவுகளையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இதேவேளை சைபர் தாக்குதலுக்கு உள்ளான இணையத்தளங்களில் 99 வீதமானவை வழமைக்குக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் இணையத்தங்களைப் பாதுகாப்பது குறித்தும் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என லால் டயஸ் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment