தொடருந்து மோதி முதியவர் சாவு ; கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் தொடருந்து மோதி முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து மோதியதிலேயே இராசேந்திரம் (வயது-62) என்பவரே சாவடைந்ததவராவார்.

யாழ்ப்பாணத்திலிருந்து நேற்று இரவு புறப்பட்ட தபால் தொடருந்து இரவு 8.30 மணியளவில் இரணைமடுச் சந்தியை அண்மித்த போது, தொடருந்துடன் மோதி முதியவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment