லங்கா ஐ.ஓ.சி. விலையும் அதிகரிப்பு

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது.
அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் ஒரு லீற்றர் 3 ரூபாவினாலும், 95 ஒக்டைன் பெற்றோல் ஒரு லீற்றர் 5 ரூபாவினாலும்  அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 02 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விலை அதிகரிப்புடன் 92 ரக ஒக்டைன் பெற்றோல் 135 ரூபாவாகவும், 95 ரக ஒக்டைன் பெற்றோல் 167 ரூபாவினாலும், சுப்பர் டீசலின் ஒரு லீட்டருக்கான விலை 136 ருபாவாகவும் காணப்படுவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment