மௌனமான சாட்சியே நந்திக்கடல் – ரவிகரன் அஞ்சலி

பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக இன்று காலை நந்திக்கடலில் அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது ஏராளமான உறவுகளின் கண்ணீரும் செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி உயிர்நீத்த  உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலித்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இன்று காலை ஒழுங்கமைக்கப்பட்ட உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவுகூறல் திடலில் நடைபெறும் என்பதையும் அவர் தெரிவித்தார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment