இந்தியாவிலும் புர்காவை தடை செய்க


இலங்கையைப் போன்று இந்தியாவிலும் பெண்கள் புர்கா அணியத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சிவசேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதையடுத்து,  இலங்கையில் முகத்தை முழுமையாக மறைக்கும்  ஆடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

இலங்கையைப் போல் இந்தியாவிலும் புர்கா அணிவதைத் தடை செய்யுமாறு சிவசேனா அமைப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக  அந்த அமைப்பின் உத்தியோகப்பூர்வ நாளிதழான சாம்னாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நாளிதழில் இலங்கையின் முடிவு துணிகரமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இலங்கையை பின்பற்றி இந்தியாவும் இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என சிவசேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment