ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள்

சிரியாவில் ஐ.எஸ். ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புடன் இணைந்து மூன்று இலங்கையர்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த இலங்கையர்கள், அண்மையில் இலங்கைக்கு அனுப்பியதாக கூறப்படும் சுமார் 40 இலட்சம் ரூபாய் பணம் குறித்தும் சிறப்பு விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆரம்பித்துள்ளது.
அண்மையில் தெஹிவளை வீடொன்றில் வைத்து பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் இரண்டாம் இலக்க விசாரணை அறை அதிகாரிகள் 23,500 அமெரிக்க டொலர்களைக் கைப்பற்றினர். அது குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளிலேயே இவ்வாறு பல விடயங்கள் வெளியாகின்றன.
இதன்படி முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் குறித்த பணம் சிரியாவில் பயிற்சிபெறும் பயங்கரவாதிகளால் அனுப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனைவிட, சிரியாவில் பயிற்சி பெறுவதாக கூறப்படும் மொஹம்மட் முஹ்சீன் இஷாக் அஹமட் மற்றும் சர்பாஸ் நிலாம் ஆகியோரின் பெற்றோரும் சகோதரியுமே குறித்த பணம் கைப்பற்றப்பட்ட தெஹிவளை வீட்டில் வசித்துள்ளனர்.
பெற்றோரான மொஹம்மட் சஹீட் மொஹம்மட் முஹ்சின், சஹாப்தீன் இனாயா மற்றும் அவர்களது மகளான பாத்திமா ருவையா ஆகிய மூவரிடமும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment