ஆற்றில் இறங்கிய விமானம் ; பயணிகள் என்னானார்கள்

அமெரிக்காவின்  புளோரிடா ஆற்றில் அந்த நாட்டின்  விமானம் ஒன்று இன்று இறங்கியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அமெரிக்காவின் போயிங் விமானம் 737 என்ற வகை விமானம் இன்று காலை 136 பயணிகளுடன் விண்ணில் பறந்து கொண்டிருந்தது. 

இதன்போது, விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்படவே, விமானத்தை தரை இறக்க விமானிகள் முடிவு செய்தனர். ஆனால் அந்த பகுதியில் ஓடுதளம் எதுவும் இல்லாததால் வேறு வழியின்றி விமானம் புளோரிடா ஆற்றில் இறக்கப்பட்டது.

விமானம் ஆற்றில் இறங்கினாலும் அதில் பயணம் செய்த 136 பயணிகள் உள்பட யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இது குறித்த தகவல் அறிந்தவுடன் பயணிகள் படகுகள் மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டனர். 

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளும், பொலிஸாரும் தீவிர விசாரணைகளை செய்து வருகின்றனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment