மன்னாரில் வெடிபொருள்கள் மீட்பு

மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சாந்திபுரம் புகையிரதக் கடவைக்கு அருகில்  உள்ள காட்டுப் பகுதியில்  சக்தி வாய்ந்த சி-4 வெடி மருந்துகள் மற்றும் டெற்றனேற்றர் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகத்திற்கு இடமான இரு பொதிகள் குறித்த பகுதியில்  அடையாளப் படுத்தப்பட்டது.


இதனையடுத்து, மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த  பொலிஸார் குறித்த பொதிகளை மீட்டு சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது பொதியிலிருந்து சக்தி வாய்ந்த சி-4 வெடி மருந்துகள் மற்றும் டெற்றனேற்றர் குச்சுகள் என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


அங்கு வந்த  விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் பொலிஸாருடன் இணைந்து அப் பகுதியில் தேடுதல்களை மேற்கொண்டனர்.

மீட்கப்பட்ட சி-4 வெடி பொருட்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டனர்.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment