யாழ்.பல்கலைக்கழகத்தில் வளைப்புத் தேடுதல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை இராணுவம், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று  அதிகாலை  முதல் சுற்றி வளைப்புத்   தேடுதல்  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பு நிமிர்த்தம் மேற்கொண்டு வரும் இந் நடவடிக்கைகளால் அப் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


தேடுதல் நடவடிக்கையின்போது  பல்கலைக்கழகத்திற்குள் ஊடகவியியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை  என்றும் தெரிவிக்கப்படுகிறது.  


இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களையடுத்து நாடு முழுவதும்  பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



இந் நிலையில் இடைநிறுத்தப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்கும் வகையில் பல்கலைக்கழகங்களிலும்  தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசு அறிவித்திருந்தது.


இந்த நிலையிலையே இன்றையதினம் யாழ் பல்கலைக்கழகம் சுறறிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதேவேளை கைதடியில் அமைந்துள்ள சித்த மருத்துவத் துறையும் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்படுகிறது. 



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment