ரஷியாவில் உணவுக்காக 100 கி.மீ. சுற்றித் திரிந்த பனிக்கரடி

உலக வெப்பமயமாதல் காரணமாக பனிப்பிரதேசங்கள் அனைத்தும் வேகமாக உருகி வருகின்றன. இதனால் பனிப் பிரதேசங்களில் வாழும் பல்வேறு உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளன. சில உயிரினங்கள் மாற்று வாழ்விடம் மற்றும் உணவு தேடி மனிதர்கள் வாழும் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.
இந்நிலையில், ரஷியா நாட்டின் செர்பியாவின் நோரில்ஸ் நகருக்குள் போலார் பனிக்கரடி ஒன்று நுழைந்து அங்குமிங்கும் சுற்றித் திரிந்தது.
பனி நிறைந்த கடற்கரை, ஆற்றுப்பகுதிகளில் காணப்படும் இவ்வகை பனிக்கரடி கடந்த சில நாட்களாக தொழிற்சாலைகள் நகரின் மையப்பகுதியில் சுற்றி திரிந்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டனர்.
இதுதொடர்பாக உள்ளூர் விலங்குகள் நல ஆர்வலர் ஒலேக் ஷிரேஷ்வேகை கூறுகையில், பனிக்கரடி ஆர்ட்டிக் பனிப்பகுதியில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக போதிய உணவு கிடைக்காமல் உணவு தேடி இடம் பெயர்ந்து நகருக்குள் வந்திருக்கலாம் அல்லது வழிதவறி நகருக்குள் நுழைந்திருக்கலாம். 40 ஆண்டுக்கு பிறகு போலார் பனிக்கரடி செர்பியாவின் நோரில்ஸ் நகருக்குள் சுற்றித்திரிவது இதுவே முதல் முறை என தெரிவித்தார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment