130 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம்

130 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக சப்ரகமுவ மாகாண சபை தெரிவித்துள்ளது. இவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு மாகாண ஆளுநர் தம்ம திஸாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது.
கடந்த வருடம் இடம்பெற்ற திறந்த பரீட்சை பெறுபேறுகளுக்கமைய அவர்கள் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவதாக சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்தார். புவியியல், வரலாறு, பௌத்தம் மற்றும் அரசியல் விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்காக குறித்த பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கப்படுகிறது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment