பேசாலை கடலில் 140 கிலோ கஞ்சா மீட்பு

மன்னார் – பேசாலை கடற்பகுதியில் கைவிடப்பட்டிருந்த 140 கிலோ கிராமுக்கும்  அதிகமான கேரளக் கஞ்சா நேற்றுமுன்தினம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த ட்ரோலர் படகொன்றிலிருந்து இந்தக் கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும், படகிலிருந்த சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சாவும் ட்ரோலர் படகையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment