ஒரு தொகுதி கஞ்சாப்பொதிகள் மீட்பு

மன்னார் – பேசாலை கடற்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் 140 கிலோ 760 கிராம் நிறை கொண்ட கேரளக் கஞ்சாப் பொதிகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த டோலர் படகொன்றிலிருந்து குறித்த கேரளக்கஞ்சா நேற்று  கைப்பற்றப்பட்டதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
பேசாலை கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே குறித்த டோலர் படகில் இருந்து கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. எனினும், சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கேரளக்கஞ்சாவையும் டோலர் படகையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment