வெலிகந்த பகுதியில் கோர விபத்து – 4 பெண்கள் உட்பட ஐவர் பலி

மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியின் வெலிகந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
வெலிகந்த நோக்கி பயணித்த டிரக்டர் வண்டி ஒன்றை அதே திசையில் பயணித்த வேன் ஒன்று மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த விபத்தில் டிரக்டரில் பயணித்த 5 பேரும் உயிரிழந்துள்ளதுடன் அவர்களில் நான்கு பெண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் 12 பேர் காயங்களுக்கு உள்ளாகி பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெலிகந்த, போவத்த பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment