முகப்புத்தகத்தின் ஊடாக களியாட்ட நிகழ்வு – 51 பேர் கைது

முகப்புத்தகத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வு ஒன்றின் கலந்துகொண்ட 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, பலாங்கொட, பெலிஹுல்ஒய பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்று பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த சோதனையின் போது போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரிகைகள் வைத்திருந்தமை தொடர்பிலேயே குறித்த 51 பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது பிரகெப்லின் 20 மாத்திரைகள், 3 ஆப்பிள் மாத்திரை, 160 மில்லி கிராம் ஹெரோயின், 300 மில்லி கிராம் கொக்கெயின், 50 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 150 கிராம் கஞ்சாவை பொலிஸார்ர் மீட்டுள்ளனர்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment