ஹட்டனில் மோதல்: 5 சிறுவர்கள் சீர்த்திருத்தப் பள்ளியில் ஒப்படைப்பு

ஹட்டன், டிக்கோயா பகுதியில் கிரிக்கெட் போட்டியின்போது ஏற்பட்ட மோதலுடன் தொடர்புடைய 6 இளைஞர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் 5 சிறுவர்களை சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா, தரவளை விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி கடந்த 9ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஐவர் காயமடைந்திருந்தனர்.
இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமே பின்னர் மோதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இது தொடர்பான காணொளி ஹட்டன், சாஞ்சிமலை பிரதான வீதியின் தரவளை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்கள் 6 பேரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய 5 சிறுவர்களை, சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் எதிர்வரும் 27ஆம் திகதி வரை வைக்குமாறும் ஹட்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த 3 பேரில் ஒருவர் கண்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதோடு, இருவர், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment