மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
முனைக்காடு மேற்கு பிரதேசத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் தரித்திருந்த மோட்டார் சைக்கிளே நேற்று மாலை இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் யாரென இதுவரையில் அறியப்படாததோடு, எதற்காக அப்பகுதியில் மோட்டார் சைக்கிள் தரித்து நின்றது என்பது தொடர்பிலும் தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment