குடைசாய்ந்தது கனரக வாகனம் ; பாதிக்கப்பட்டது போக்குவரத்து

இரும்பு மற்றும் உபகரணங்களை ஏற்றி சென்ற கனரக வாகனம் ஒன்று குடை சாய்ந்ததில் போக்குவரத்துப் பாதிக்கபட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவம் இன்று காலை கினிகத்தேனை களுகொல்ல பகுதி பிரதான வீதியில் நடந்துள்ளது.

கொழும்பு துறைமுகத்திலிருந்து கினிகத்தேனை புரோட்லேன்ட் மின்சார நிலையத்திற்கு 25 தொன் நிறையுடன் வந்த வாகனமே இவ்வாறு குடைசாய்ந்துள்ளது.

விபத்து காரணமாக பொல்பிட்டிய, மினுவாந்தென, அங்ராபிட்டிய, லக்ஸபான - நோட்டன்பிரிட்ஜ் ஊடாக மஸ்கெலியா ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து சுமார் நான்கு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

பொலிஸாரின் நடவடிக்கையினால் பெக்கோ இயந்திரம் பயன்படுத்தி கனரக வாகனத்தை மீட்ட பிறகு போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.




Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment