பலத்த சோதனையின் பின் முஸ்ஸிம் பாடசாலைகள் ஆரம்பம்

வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்ஸிம் பாடசாலைகளும் தீவிர சோதனைகள் மற்றும் பாதுகாப்பின் மத்தியில் இன்று ஆரம்பித்தது.

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் மற்றும்  நோன்பு பெருநாள் விடுமுறையைத் தொடர்ந்து இரண்டாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைக்காக முஸ்லிம்  பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. 

இந்த நிலையில், பாடசாலை சமூகத்தினருடன் பொலிஸாரும் இணைந்து  வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்ஸிம் பாடசாலைகளிலும் தீவிர சோதனை நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டதுடன், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் பைகள் சோதனை செய்யப்பட்டு பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது பொலிசார் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில் பாடசாலை நடைபெற்றது.












Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment