மரபணு அறிக்கையில் முகமது ஆசாத் தற்கொலைக் குண்டுதாரி

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் தற்கொலைக் குண்டுதாரி முகமது நாசார் முகமது ஆசாத் என்பவருடையது என மரபணு சோதனையில் தெரிய வந்துள்ளது.

கடந்த 21 ஆம் திகதி இடம் பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அயல் வீட்டின் கூரையின் மேலிருந்து  தலை மற்றும் இரண்டு கால்கள் கொண்ட உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. 

அடையாளம் காணத நிலையில் மீட்கப்பட்ட தலை மற்றும் உடற்பாகங்கள் தொடர்ந்தும் மட்டக்களப்பு போதனா மருத்துவமனை  பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்கொலைத் தாக்குதலை  நடத்திய காத்தான்குடியைச் சேர்ந்த தற்கொலையாளியான 34 வயதுடைய  முகமது நாசார் முகமது ஆசாத் எனத் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து இவரின்  தாயாரான 54 வயதுடைய  அலியார் லதீபர் பிவி  கைது செய்யப்பட்ட நிலையில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதவானுக்கு முன்னால்  குறித்த சடலத்தை தனது மகன் என அடையாளம் காட்டினார்.

இது குண்டு தாக்குதலால் ஏற்பட்ட மரணம் எனவும் உயிரிழந்தவரின் தாயாரின்  மாதிரி இரத்தத்தை பெற்று மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார் 

இந்த உடற் கூறுகள் ஆசாத்தின் உடைய உடற் கூறுகள் என அரச இரசாயனவியல் பகுப்பாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொண்டபோது சி.ஐ.டி.யினர் ஆஜராகி இரசாயனவியல் பகுப்பாய்வுத்  திணைக்களம் அனுப்பிய மரபணு பரிசோதனை அறிக்கைளை நீதிவானிடம் ஒப்படைத்தனர் 



இந்த உடற் கூறின் தலையை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி சடலத்தை அரச செலவில் அடக்கம் செய்யுமாறு  மாவட்டச் செயலருக்கு நீதிவான் கட்டளை பிறப்பித்துள்ளார். 


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment