அரசியல் அனைத்து துறைகளிலும் தாக்கம் செலுத்த கூடாது

நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் அரசியல் அனைத்து துறைகளிலும் தாக்கம் செலுத்த கூடாது. அரசியல் கட்சி ரீதியில் மாத்திரமே செல்வாக்கு செலுத்த வேண்டும் ஆனால் நடைமுறையில் மதம் உள்ளிட்ட அனைத்திலும் அரசிலே ஆதிக்கம் செலுத்துகின்றது என சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
களுத்துறை பிரதேசத்தில் இன்று இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எமது நாட்டில் அனைத்து வளங்களும் காணப்படுகின்றது.ஆனால் அனைத்திலும் அரசியல் கருத்துக்களே முன்னிலைப்படுத்தப்படுகின்றது.
இந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். குறுகிய காலத்திற்குள் அனைத்து துறைகளும் முன்னேற்றமடைந்துள்ளது.
குறிப்பாக சுகாதாரத்துறையில் பல நவீன தொழினுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு சாதாரண தரப்பினரும் உயர் தொழினுட்பங்களை உள்ளடக்கிய மருத்துவத்தை பெற்றுக் கொள்ளும் வசதிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நாம் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் அனைத்து துறைகளிலும் அரசியல் தாக்கம் செலுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment