கடலில் தவிக்கும் மீனவர்களை மீட்க கடலோர காவல் படை பயணம்

லட்சத்தீவு அருகே கடலில் சிக்கித் தவிக்கும்  மீனவர்களை மீட்க கடலோர காவல் படையினர் விரைந்துள்ளனர்.

கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்திலிருந்து  இரு விசைப் படகுகளில் 20 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்காக கடந்த மே 2 ஆம் திகதி, கடலுக்குச் சென்றனர்.

இந்த நிலையில் லட்சத்தீவு அருகே தித்திரா தீவு பகுதியில் இரு படகுகளும் எதிர்பாராதவிதமாக பழுதடைந்தது. 

இதனால் குமரி மாவட்டத்தை சேர்ந்த 14 பேர், ஆந்திரத்தை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 20 மீனவர்களும் கரை திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில் அவர்களை மீட்க லட்சத்தீவு அருகே உள்ள கவர்த்தி தீவில் இருந்து கடலோர காவல் படையினர்   கப்பலில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். 

மீனவர்கள் விரைவில் பத்திரமாக கரை சேர்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment