வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார் அத்துரலிய ரத்தன தேரர்!

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தற்போது கண்டி வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரத்தன தேரர் ரிசாட் பதியுதீன், ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோரை பதவி விலகுமாறு கோரி 4 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் ஒப்படைத்திருந்த நிலையில் தேரர் தனது உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்து கொண்டார்.
இதனை அடுத்து அவர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் , தனது சுய விருப்பின் பேரில் தேரர் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment